பொல்பிதிகம நிகதலுபத பகுதியில் 55 வயதுடைய பெண் ஒருவர் கூரிய கத்தி ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
காணி தகராறு காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரும் அவரது மகளும் நபர் ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலை கட்டுப்படுத்த உயிரிழந்த பெண் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
சந்தேக நபர்
இதன்போது சந்தேகநபர் குறித்த பெண்ணை கூரிய கத்தியொன்றில் கொடூரமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொல்பித்திகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகினற்னர்.