தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெறும் என ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
பெப்ரவரி 2023 மாதத்திற்கான சுகாதார கொள்கை நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
சறுக்கிய சஜித்
கணக்கெடுப்பின்படி, தேசிய மக்கள் சக்தி 43% மக்களின் ஆதரவையும், ஐக்கிய மக்கள் சக்தி 30% சதவீதத்தையும் பெற்றுள்ளது.
சிறி லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலா 4% மக்கள் ஆதரவை பெறுமென இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.