Vijay - Favicon

குரங்கு அம்மை பரவாமல் தடுக்கும் வழி – நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை


குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.


இந்த முறைகள் அடிப்படைத் தடுப்பு முறையாக கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரியம்மை மற்றும் சின்னம்மைக்கு இடையில் உள்ள ஒரு வைரஸால் குரங்கம்மை ஏற்படுகிறது.

அது கொப்புளங்களாகத் தோன்றும், குரங்கம்மை அல்லது பெரியம்மை தடுப்பூசிகள் நாட்டில் இல்லை.

அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்

குரங்கு அம்மை பரவாமல் தடுக்கும் வழி - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை | What Can Be Prevent The Spread Of Monkey Measles

எனவே, அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பேணுவது மிகவும் அவசியம் என்று பெரேரா கூறினார்.


இந்த நோய் தோலில் இருந்து தோல் மற்றும் வாயிலிருந்து வாய் உட்பட சாதாரண தொடர்புகள் மூலமாகவும், பாலியல் தொடர்பு மூலமாகவும் பரவக்கூடும்.


எனவே, பொதுமக்கள் தங்கள் நெருங்கிய தொடர்புகளை 21 நாட்கள் வரை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



8 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால் அது தீவிரமாக இருக்கும்.

அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைப்பை கூட ஏற்படுத்தலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *