Vijay - Favicon

மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பிரதி அதிபர் கைது


அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பதினோராம் வருட மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ் அப் செயலி ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.


47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை நாட்களிலும் பாலியல் வன்கொடுமை

மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பிரதி அதிபர் கைது | Vice Principal Arrested Sending Nude Photos

வாட்ஸ்அப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பள்ளி காலத்தில் அலுவலகத்திற்கு மாணவி வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மாணவியின் தாயார் தனது கையடக்கத் தொலைபேசியில் நிர்வாணப் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், அது குறித்து தனது மகளிடம் கேட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முறைப்பாடு

மாணவிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பிரதி அதிபர் கைது | Vice Principal Arrested Sending Nude Photos


பின்னர் தாயும் மகளும் கம்பஹா காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.


மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், மேற்கு வடக்கு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, சிறுவர் மற்றும் பெண்கள் பணியக பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர ஆகியோரின் பூரண மேற்பார்வையின் கீழ், மாதகம்பஹா பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரையின் கீழ், ஜகத் ரோஹன மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் உபாலி காரியவசம் ஆகியோர் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் தொடர்பில் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *