ரஷ்ய- கெர்சன் நகரின் மீது உக்ரைன் இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்த வகையில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஸ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது.
சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஸ்யாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் இராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ரஸ்ய அதிபர் புதின் இராணுவ சட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ரஸ்யா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற ரஸ்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,