கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) போலி ஆவணங்களுடன் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற இரு ஈராக் பிரஜைகள் பிடிபட்டதுடன், அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
தந்தை மற்றும் மகன் எனக் கூறிக் கொண்ட நபர்கள் டொமினிகன் குடியரசில் இருந்து போலியான விமான அனுமதிச் சீட்டுகளை சமர்ப்பித்து அவற்றைப் பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆவண பரிசோதனையில் சிக்கினர்
இவர்களின் ஆவணங்களை பரிசோதித்த குடிவரவு அதிகாரிகள் அவை போலியானவை என கண்டறிந்ததுடன் அவர்களை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.