Vijay - Favicon

தொலைபேசி தொடர்பு -மாணவி வன்புணர்வு


வாட்ஸ்அப் மூலம் ஏற்பட்ட தொடர்பால் பாடசாலை மாணவியான சிறுமியை ஏமாற்றி கண்டி கட்டம்பே பிரதேசத்தில் உள்ள தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்ய கண்டி தலைமையக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யத் தேடப்படும் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் வாட்ஸ்அப் ஊடாக இந்த மாணவியை அடையாளம் கண்டுகொண்டதாகவும் மாணவியுடன் சில காலமாக காதல் உறவில் இருந்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாணவியை ஏமாற்றி

அம்பலாங்கொட பிரதேசத்தில் வசிப்பவர்கள் என கூறப்படும் இவர்கள் கண்டிக்கு வந்து மாணவியை ஏமாற்றி கட்பே பிரதேசத்தில் உள்ள தங்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன

கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதி

அந்த நபரை அன்று வரை இந்த மாணவி பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *