யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இன்று (10) இடம்பெற்றுள்ளது.
அரியாலை தபால்கட்டை சந்தியில் இன்று மதிய வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவ்வழியே வந்தவரை, குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞரொருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
படுகாயமடைந்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.