அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பருத்தித்துறை கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 இந்திய கடற்றொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர்
கைதுசெய்துள்ளனர்.
மேலும், கடற்றொழிலாளர்கள் பயணித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கை
அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும்,கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம்
ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.