Vijay - Favicon

சிறிலங்காவை மையப்படுத்தி சீன இந்திய வல்லாதிக்க போர் – தோற்றது சீனா!


சிறிலங்காவிற்கு அதிக கடன் வழங்கிய நாடாக, சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அந்த வகையில், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில், 968 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா, சிறிலங்காவிற்கு கடனாக வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சிறிலங்காவிற்கு, இந்தியா அதிகளவான கடனை வழங்கியிருந்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியிருந்தது.

இலங்கையுடன் நெருங்கிய உறவு காரணமாகவே மனிதாபிமான உதவிகள்

இதுதவிர, 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 44 ஆயிரம் டன் யூரியா உரத்தையும், இந்தியா வழங்கியுள்ளது. இலங்கையுடன் நெருங்கிய உறவு மற்றும் நல்லெண்ணம் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சீனா இருதரப்பு கடன் உதவியாக 947 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கி முதன்மை வகித்திருந்தது.

நாணயபரிமாற்ற ஒப்பந்தம்

central bank of sri lanka


அதில் 809 மில்லியன் அமெரிக்க டொலர் சீனா அபிவிருத்தி வங்கியின் ஊடாக நாணய பறிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், முதல் 4 மாதங்களில் இந்தியா 968 மில்லியன் அமெரிக்க டொலரை சிறிலங்காவிற்கு வழங்கி, இலங்கைக்கான கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்தள்ளியுள்ளது.

அதுமட்டுமன்றி நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சிறிலங்காவிற்கு, இந்தியா அதிகளவான கடனை வழங்கியிருந்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியிருந்தது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *