Vijay - Favicon

பாடசாலைக்கு செல்ல முடியாத சூழலில் மாணவிகள் – நாடாளுமன்றத்தில் சஜித் வலியுறுத்திய விடயம்


அன்று நான் மாணவிகளுக்கு அவசியமான ஆரோக்கியத் துவாய் குறித்து பேசும் போது சிரித்தார்கள். ஆனால் இன்று மாணவிகள் பாடசாலைக்கு கூட செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.


இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.


இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “இப்போது பாடசாலை செல்லும் மாணவிகளுக்குத் தேவையான ஆரோக்கியத் துவாய் தொடர்பாக பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

துரித தீர்வு அவசியம்


இதன் காரணமாக அதிகமான மாணவிகள் பாடசாலை செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.



அன்று இது குறித்து தான் பேசியபோது அதிகமானவர்கள் கேலி செய்தாலும் இன்று அந்தப் பிரச்சினை உக்கிரம் அடைந்துள்ளது.



இப்பின்னணியில், உரிய அதிகாரிகள் அதற்கான தீர்வை துரிதமாக பெற்றுக் கொடுப்பதன் அவசியம் பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *