Vijay - Favicon

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் அதிபர் தேர்தல் -வெளியானது அறிவிப்பு


உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என்றும், அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று நடைபெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உள்ளுராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துவோம் என தெரிவித்தார்.

தேர்தலை ஒத்திவைக்க விரும்பவில்லை

“தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்திவைப்பது ஏற்புடையதல்ல. கூடிய விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். இருப்பினும் உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் 25-ம் திகதி நடைபெற வாய்ப்பில்லை. அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெறும்,” என்றார்.

“நாடு முழுவதும் உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் 8,000 உறுப்பினர்கள் உள்ளனர், இது நாட்டுக்கு சுமை. ஆணைக்குழு நியமிக்கப்பட்டு உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறிக்கை கிடைத்தவுடன் தேர்தலை நடத்த தயார்,”என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார் 



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *