Vijay - Favicon

கந்தகாடு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை கோருகிறார் – ஸ்ரீலங்கா மிரர் – அறியும் உரிமை. மாற்ற சக்தி


கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று (07) மாலை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று இரவு மோதல் ஏற்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

காயமடைந்த ஐந்து கைதிகள் முதலில் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அமைதியின்மையின் போது புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து மற்றொரு கைதிகள் தப்பிச் சென்றதாக திரு. ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதற்கிடையில், கட்டுக்கடங்காத கைதிகள் குழுவொன்று மையத்தில் அமைந்துள்ள 9வது களப் படைப்பிரிவு இலங்கை பீரங்கியின் ஆயுதக் களஞ்சியத்தை உடைக்க முற்பட்டதாகவும், ஆனால் கடமையிலிருந்த படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் ‘அட’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *