Vijay - Favicon

அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்! நாளை புதன் கிழமைக்கான மின் துண்டிப்பு அட்டவணை


மின்வெட்டு

நாளை (21) புதன்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


விபரங்களின் படி, குறித்த நாட்களில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.



மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


மின்வெட்டு நேர அதிகரிப்பு

கடந்த நாட்களில் 1 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால் நாளை முதல் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களாக மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.    



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *