கொழும்பு சர்வதேச விமான நிலையம்
220 மில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கப்பட்டு தயார்படுத்தப்பட்ட இரத்மலானையில் உள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தற்போது விமானங்களின் வருகை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமான நிலையம் கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
மாலைதீவு விமானங்கள்
அதன்படி, வாரத்திற்கு மூன்று மாலைதீவு விமானங்கள் அங்கு தரையிறங்கும் எனத் தெரியவந்தது.
ஆனால் தற்போது அந்த விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.