கொழும்பு- கொட்டாஞ்சேனை பரமாநந்த விகாரமாவத்த பகுதியில் இன்றிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 40வயது மதிக்கதக்க ஒருவர் காயமடைந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
முகமூடி அணிந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.