Vijay - Favicon

உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!


நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.


2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு வருடங்களாக உள்ளூராட்சி நிர்வாகம் இயங்கி வந்த போதிலும், கடந்த வருடத்தின் நிலைமை காரணமாக, அதன் உத்தியோகபூர்வ காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.


எவ்வாறாயினும் உள்ளுராட்சி சட்டத்தின் பிரகாரம் இத்தினத்திற்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தி புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

அரச சொத்துக்கள்

உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! | Local Government Election Side Expiring Position


ஆனால் குறித்த திகதிக்கு முன்னதாக வாக்குப்பதிவு நடத்த முடியாத காரணத்தால் இன்று நள்ளிரவுடன் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் முடிவடைகிறது.


இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களுக்கும், 36 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களுக்கும் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாமதமாக ஸ்தாபிக்கப்பட்ட எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் அதிகாரங்கள் மாத்திரமே நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்களை ஒப்படைக்குமாறு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *