யாழ் பல்கலைக்கழகத்தின் இந்து பீடத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்து பீடத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு வருடந்தோறும் சுமார் 100
மாணவர்களை உள்வாங்குவதற்கான திட்டமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் துறைசார் அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்தவிற்கும்
இடையில் கடந்த (14.11.2022) அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தீர்மானம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்டுகின்றது.
நிதி ஒதுக்கீடு
2019 ஆம் ஆண்டு இந்து நாகரீகம், சமஸ்கிருதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகிய கற்கைநெறிகளைக் கொண்ட தனித்துவமான பீடம்
உருவாக்கப்பட்டது.
எனினும் பேதிய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாத காரணத்தினால் தற்போது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.