ஐக்கிய நாடுகள் சபையினருக்கும் யாழ் மாநகர முதல்வருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (18) யாழ் மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் கலந்துக்கொண்டிருந்ததார்.
கலந்துரையாடல்
இந்த சந்திப்பில் “ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்கள் மற்றும் ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் பீற்றர் டியு, அரசியல் விவகார அதிகாரி அல்மா சாலியு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி
ஹனா சிங்கர்” ஆகியோரே கலந்துகொண்டிருந்தனர்.
மேலும், சந்திப்பின் நிறைவில் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வருகைதந்த ஐ.நா குழுவினர் பல்வேறு தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.