Vijay - Favicon

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா வெளியிட்ட அறிவிப்பு


இந்தியாவில் உயர்கல்வியினைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-07 ஆம் ஆண்டுகளிலிருந்து இந்த புலமைப்பரிசில் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்திவருகிறது.


இதன்படி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்(PIOs) மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்கள்(NRIs), இந்திய பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள 
இந்திய அரசால் உதவிகள் வழங்கப்படுகின்றன.

புலமைப்பரிசில் திட்டம்

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா வெளியிட்ட அறிவிப்பு | India Scholarships For Sri Lankan Students

தொழில்சார்ந்த மற்றும் தொழில்முறைசாராத (மருத்துவம்/துணைமருத்துவம் தவிர்ந்த) கற்கைநெறிகளுக்கான நிதி உதவியினை அவர்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.புதுமுக (முதலாம் வருடம்) மாணவர்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்க முடியும்.


மேற்குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக இலங்கையில் உள்ள மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

தகுதியுடைய விண்ணப்பதாரிகள் 

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா வெளியிட்ட அறிவிப்பு | India Scholarships For Sri Lankan Students

இந்த புலமைப்பரிசில் தொடர்பான விரிவான தகவல்களை http://www.spdcindia.gov.in/login/guideline.php. என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

தகுதியுடைய விண்ணப்பதாரிகள் 2022 நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *