ஹங்வெல்ல பகுதியில் அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த சிறப்பு அங்காடி ஒன்றுக்கு 10 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை பிரதான நீதிவான் ஜே.பீ.சமரசிங்க, இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முட்டையை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தமை அடிப்படையில், குறித்த அங்காடிக்கு எதிராக, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகூடிய தொகை
குறித்த அபராதமானது, இதுவரையில் அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அதிகூடிய தொகையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.