இலங்கையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.
அந்தவகையில், கிரிந்த பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இது 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
மற்றோன்று, இன்று காலை 3.30 அளவில் திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் 3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.