- www.vijay.lk
- info@vijay.lk
- Sri Lanka

சவூதி அரேபியாவின் கட்டுமான மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக அதிகளவான இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும், இராச்சியத்தில் பணிபுரியும் இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியக் கட்டமைப்பை உயர்த்துவதற்கும் அந்த நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் மனித வள மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருடன் இலங்கையின் வெளிநாட்டு…

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை பி.வி.நந்திதா தங்கம் வென்றுள்ளார். அதே போன்று ஆடவர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்றுள்ளார். இருவருக்கும் மலையகம்.lk சார்பாக வாழ்த்துக்கள்! Source link

இந்தியாவின் குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 177 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் குஜராத்தின் மோபி பகுதியில் பாயும் மச்சு ஆற்றின் குறுக்கே 230…

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்த போதே டொனால்ட்…

சோழர்களின் ஆட்சியில்தான் தமிழர்களுக்கான தனித்துவ அடையாளங்கள் நிறுவப்பட்டன – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு சோழர்களின் ஆட்சிக்காலம் என்பது தமிழக வரலாற்றின் பொற்காலம் என்றே போற்றப்படுகிறது, அதிலும் குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தே தமிழும், சைவமும் செழிப்புற்றிருந்ததை வரலாறு சொல்கிறது. தமிழர்களுக்கான மாபெரும் அடையாளமான தஞ்சைப் பெருங்கோயில்…

அமெரிக்க வதிவிட கிரீன் கார்ட் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி கடந்த அக்டோபர் 05 முதல் நவம்பர் 8ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விண்ணப்பங்களுக்கும் இணையமூடாகவே இடம்பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே வழங்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும் https://dvprogram.state.gov/ Source link
இடைநிறுத்தப்பட்ட ரஷ்ய ஏரோ-ஃப்ளொட் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். 65 வருடகாலமாக நிலவிவரும் ரஷ்ய – இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்தும்…
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. அத்துடன், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடர்பில் இலங்கையின் முன்னேற்றம் குறித்து…
இந்தோனேசியாவில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் ரசிகர்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அரேமா எஃப்சி அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தோனேசியாவின்…
ரஷ்யாவிலுள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவர்களே சம்பவத்தில் பலியாகியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் தௌிவாக தெரியவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்….
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு ,இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன் இணைந்து இரு தரப்பு உறவுகளையும், கலாச்சாரத்தினை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறையினை மேம்படுத்த முடியும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சிகளை 2022 செப்டெம்பர் 26…
சுகாதாரத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் அபிவிருத்தி அமைப்பு Americares, 7 இலட்சத்து 73ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இவற்றில் கர்ப்பிணி தாய்மாருக்கான விற்றமின்கள்,…
வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை சீனாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் முற்றாக ஒழியாமல் உலக மக்களை பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கவசமாக…
ஜப்பானில் கடந்த 18 ஆம்திகதி ஏற்பட்ட “நன்மடோல்” சூறாவளி தெற்கு பகுதியில் உள்ள கியூஷு தீவினை தாக்கியுள்ளது. தீவின் தெற்கு முனையில் உள்ள ககோஷிமா நகருக்கு அருகே புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசியதால் மரங்களும்,…
பிரிட்டனில் முடியாட்சி செய்த இரண்டாவது எலிசெபெத் மகாராணி, நேற்று நிரந்தர பிரியாவிடை பெற்றார். கடந்த பத்து நாட்களாக பொது மக்கள் மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்திய வெஸ்ட்-மின்ஸ்ட்டர் அபே மண்டபத்தில் நேற்று (19) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. மகாராணி கடந்த 8 ஆம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் , பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்…