Vijay - Favicon

பல்கலைக்கழக பகிடிவதை விசாரணைகளை இனிமேல் சி.ஐ.டி.யினரே முன்னெடுப்பர் : பொலிஸ் தலைமையகம் !


பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

இதற்கமைய இதன் பின்னர் எந்தவொரு பொலிஸ் பிரிவிலும் பதிவாகும் பகிடிவதை தொடர்பிலும் சி.ஐ.டி.யினரேயே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் குற்றவியல் நடைமுறை சட்டக் கோவைக்கு அமைய இவ்வாறு அவை பொலிஸ் மா அதிபரால் சி.ஐ.டி.யினருக்கு விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *