(வி.ரி.சகாதேவராஜா)
கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி பிரதான வீதி வழியாக பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் கடந்த 17 ஆம் திகதி சனிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
தொடர்ச்சியாக 10 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவடைகிறது.
தினமும் பகல் 12 மணிக்கு மதிய பூஜையும் மாலை 6 மணிக்கு இரவு பூஜை யும் இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
நேற்று 19ஆம் தேதி திங்கட்கிழமை ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பால்குட பவனி இடம்பெற்றது.
23ஆம் தேதி வெள்ளிக்கிழமை வீரகம்பம் வெட்டல் அதனை தொடர்ந்து 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நோன்புக் கட்டல் சடங்கு இடம் பெறும்.
26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஆராதனையும் தீமிதிப்பு வைபவமும் இடம்பெற இருப்பதாக ஆலய பரிபாலன சபை தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார் .
வழமை போல அக்டோபர் 05 ஆம் தேதி கௌரி விரதம் இடம்பெறும்.