
புதிய அரசியலமைப்பை உருவாக்க 2020 அக்டோபரில் முதல் குழு கூடி, 38 குழு அமர்வுகள் மற்றும் வெளி கட்சிகளுடன் ஒன்பது பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
இந்த செலவினங்களில், அலுவலக உபகரணங்களுக்காக 12.5 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது , எவ்வித தேவைக்கும் பயன்படுத்தப்படாத மூன்று அலுவலக அறைகளுக்கான வாடகையும் வழங்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.