Vijay - Favicon

ஆதிவாசிகள் தலைவி லிசினோனாவின் கடைக்கு தீ வைப்பு !


தலுகானவில் ஆதிவாசிகள் தலைவியான லிசினோனாவுக்குச் சொந்தமான கடைக்கு நேற்று அதிகாலை சிலர் தீ வைத்ததாக மனங்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திம்புலாகல தலுகான கிராமத்திலும் அதனைச் சுற்றியுள்ள பழங்குடியினக் கிராமங்களிலும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், போதைப்பொருள் வியாபாரிகள் குழுவொன்று தமது எதிர்ப்பின் விளைவாக தீ வைத்துள்ளதாகவும் பழங்குடியினத் தலைவர் கூறுகிறார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்தாவிடின் தாம் ஆதரிக்கும் பழங்குடியினத் தலைவர்களுடன் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் லிசினோனா தெரிவித்தார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *