அம்பாறை – ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான கந்தையா ஷோபனா (32) என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காட்டு யானையின் தாக்குதலில் கண்ணகி கிராமம் பகுதியில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.