Vijay - Favicon

காட்டுயானை தாக்கி பெண் பலி!


அம்பாறை – ஆலையடிவேம்பு கண்ணகி கிராமத்தில் இன்று (10) அதிகாலை யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான கந்தையா ஷோபனா (32) என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அதிகாலை வேளையில் காட்டுயானையினால் வீடு உடைக்கப்படும்போது, தமது பிள்ளைகளை காப்பாற்ற முயற்சித்த வேளை குறித்த பெண் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளாதாக விசாரணையில் தெரியவந்தள்ளது.

அத்துடன், காட்டு யானையின் தாக்குதலில் கண்ணகி கிராமம் பகுதியில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *