Vijay - Favicon

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொலைபேசி இலக்கங்கள் !


சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளன.

சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 1929 என்ற இலக்கத்துக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் 1938 என்ற இலக்கத்துக்கும் தெரிவிக்கலாம்.

வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை இது தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.

சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சமர்ப்பிக்க முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *