இந்திய கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
ஆறு இலங்கை கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலை
கைதானவர்கள் இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சென்னை புழால் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என தமிழக காவல்துறையினர் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.