யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பிறந்து 42 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது.
அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற குழந்தையே மரணமடைந்துள்ளது.
மரண விசாரணை
நேற்றிரவு(14) பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தையை இன்று அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது குழந்தையின் வாய், மூக்கால் இரத்தம் வந்துள்ளது.
உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.