Vijay - Favicon

நீர் இருப்பு குறைகிறது; மின் உற்பத்திக்கு விரைவில் எரிபொருள் தேவைப்படுகிறது



நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி இல்லாத காரணத்தினால் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

அதன்படி, 85 சதவீதமாக இருந்த நீர் இருப்பு தற்போது 80 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக பெய்த போதிய மழையின் காரணமாக கிட்டத்தட்ட 80% மின்சார உற்பத்தி நீர் மின்சாரம் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.

தற்போதுள்ள நீர் இருப்புக்களை பாதுகாப்பது இன்றியமையாதது என்பதால், கூடிய விரைவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான அளவு எரிபொருளை வழங்குவது முக்கியம் என பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *