பொதுமக்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் நாளை (20) முதல் தளர்த்தப்படும் என சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் பொது காட்சியகம் நாளை முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மக்கள் பாராளுமன்றத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
பாராளுமன்ற அலுவல்கள் குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, கோவிட்-19 தொற்று மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியதன் அவசியத்தை சார்ஜென்ட் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் படி, பாடசாலை அதிகாரிகள் www.parliament.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது 011 2 777 473 அல்லது 335 என்ற இலக்கங்களுக்கு தொலைநகல் ஒன்றை அனுப்பி சந்திப்பை மேற்கொள்ளலாம்.
பல்கலைக்கழக மாணவர்கள், அரசில் பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதே முறையில் பாராளுமன்றத்திற்கு வருகை தரலாம் என திரு பெர்னாண்டோ கூறினார்.