Vijay - Favicon

25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது!


அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பல ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து கைப்பைகளை கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *