Vijay - Favicon

21ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதையடுத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலமும் நிறைவு




Colombo (News 1st) 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தற்போது செயற்படும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 02 வாரங்களுக்குள் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களை நியமிக்கப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். 

அதனை தொடர்ந்து 02 வாரங்களுள் சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
நீதிச் சேவை ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழு
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு 
தேசிய கொள்வனவு ஆணைக்குழு 
தேசிய கணக்காய்வு ஆணைக்குழு 
அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்கள் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் மீண்டும் அமுல்படுத்தப்படுகின்றன.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *