Vijay - Favicon

2023 இல் 146 நாட்களில் 239 கொலைச்சம்பவங்கள் : 23 பேர் சுட்டுக்கொலை !


2023 இல் இதுவரை 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிபிரயோகங்கள் காரணமாக இந்தவருடம் இதுவரை ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2019 இல் 273 கொலைச்சம்பவங்கள் பதிவாகியிருந்தன 2022 இல் இது 523ஆக அதிகரித்தது என திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடபான பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

2023 இன் 146 நாட்களில் 239 கொலைகள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள அவர் கொலைகள் நாளாந்தம் 1.6 வீதமாக அதிகரித்துள்ளன இலங்கைக்கு இது உகந்தநிலைமையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்திலும் குற்றவாளிகள் மத்தியிலும் ஆயுதங்கள் பாவனை அதிகரிப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதனை தடுப்பதற்காக வலுவான புலனாய்வு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *