Vijay - Favicon

15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்!


யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். ஆனாலும் இரவு 08 மணி வரையில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கப்பட்டுள்ளது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *