ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பதுளை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த 15 வயது சிறுவனின் பாட்டி அண்மையில் சிறிபாதை பகுதிக்கு சென்று மீண்டும் சிறுவனின் வீட்டுக்கு வருகை தந்ததாகவும் தெரியவந்துள்ளதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனவும்
மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
ராமு தனராஜா