மெய் பாதுகாவலரின் துப்பாக்கியை காணவில்லை.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்கில சாலிய எல்லாவள அவர்களின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கி காணாமல் போய் உள்ளது.
சில தினங்களுக்கு முன் மேற்குறிப்பிட்ட விசேட அதிதிகளின் மெய் பாதுகாவலர்
குறித்த துப்பாக்கியை பையில் வைத்து இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்கில சாலிய எல்லாவள அவர்களின் பலாங்கொடை இல்லத்தில் உள்ள பாதுகாவலர் அறையில் வைத்து விட்டு தாம் விடுமுறையில் சென்றுள்ளார்.
விடுமுறை முடிந்தது மீண்டும் தான் கடமைக்காக வந்தபோது குறித்த பையில் துப்பாக்கி இருக்கவில்லை என்பதால் இந்த விடயம் குறித்துபலாங்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.