Vijay - Favicon

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் படகிற்குள் உயிரிழப்பு




Colombo (News 1st) சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் படகிற்குள் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த மீனவர் கடந்த பெப்ரவரி மாதம் திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மேலும் ஐவருடன் கடற்றொழில் நடவடிக்கைக்காக கடலுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ​போது ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கற்பிட்டியை சேர்ந்த 65 வயதான குறித்த மீனவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *