Vijay - Favicon

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பசறை பொலிஸாரால் கைது.


பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவேக்கலை பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஸ்தானத்திற்கு விரைந்து சந்தேகத்துக்கிடமான இடத்தினை சுற்றிவளைத்த போது அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 32,48 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்ததோடு மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன‌.

இரு சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

 

ராமு தனராஜா



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *