Colombo (News 1st) இலங்கையை சேர்ந்த 12 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
கடல் மார்க்கமாக சென்ற இவர்கள் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காம் மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
அங்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை அகதிகளை அரிச்சல்முனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.