Colombo (News 1st) பேருவளையில் மூன்று துப்பாக்கிகள் மற்றும் 630 ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை ரயில் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவரை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரிடமிருந்து ரவைகள் சில மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். அவர் வழங்கிய தகவலுக்கு அமைய, அவருடைய வீட்டை சோதனைக்குட்படுத்திய போது, மூன்று துப்பாக்கிகளும் 590 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
The post பேருவளையில் 3 துப்பாக்கிகள் 630 ரவைகளுடன் ஒருவர் கைது appeared first on Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.