Colombo (News 1st) அயர்லாந்துடன் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் பின்னர் டெஸ்ட் அணியின் தலைமைத்துவத்திலிருந்து விலகவுள்ளதாக திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.