Vijay - Favicon

சட்ட விரோதமான முறையில் இரு துப்பாக்கிகள் கைவசம் வைத்திருந்த நபர் கைது.


படல்கும்பர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ல கெடவில படல்கும்பர பகுதியில் வீடொன்றில் சட்ட விரோதமான முறையில் இரு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஆக்கரத்தனை விஷேட அதிரடி படையினரின் முகாமின் உயர் அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய எல்ல கெடவில படல்கும்பர பகுதிக்கு விரைந்த விஷேட அதிரடி படையினர் வீடொன்றில் கட்டிலுக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் சொட்கன் ஒன்றும் சொட்கன்னுக்கு பயன்படுத்தப்படும் ஒரு தோட்டாவும் 6 வெற்று தோட்டாக்களும் மேலும் 16 போலை குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதோடு 50 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிகளையும் சந்தேக நபர்களையும் படல்கும்பர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு குறித்த சந்தேக நபர் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளை படல்கும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா



Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *