Vijay - Favicon

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய மோதல்: கைது செய்யப்பட்ட கைதிகள் தடுத்து வைப்பு




Colombo (News 1st) கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் தப்பிச்சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட 217 கைதிகளும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கைதிகள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குரங்கொட நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். 

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்காக சிரேஷ்ட அதிகாரிகள் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த குழுவினூடாக தயாரிக்கப்படும் அறிக்கை, நீதி அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம்(06) இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, அமைதியின்மை ஏற்பட்டது. 





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *