Vijay - Favicon

கட்டளையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்




Colombo (News 1st) கட்டளையை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொல்கஹவெல பகுதியில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பொல்கஹவெல நீதிமன்றத்திற்கு அருகே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளை பிறப்பித்துள்ளனர்.

கட்டளையை மீறி குறித்த கார் பயணித்த போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *