Vijay - Favicon

ஓடைக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சிறுமியின் பூதவுடல் நல்லடக்கம்




Colombo (News 1st) கொத்மலை – வெதமுல்லவத்த பகுதியில் ஹமில்டன் ஓடையை கடக்க முற்பட்ட போது தவறி வீழ்ந்து உயிரிழந்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று(07) இடம்பெற்றன. 

கொத்மலை வெதமுல்லவத்த பகுதியில் ஹமில்டன் ஓடையை கடக்க முற்பட்ட போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயதான யோகராசா அனுஷ்கா என்ற சிறுமி நேற்று(06) உயிரிழந்தார். 

மரக்கறி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தமது தாய்க்கு தங்கையுடன்  உணவு எடுத்துச்சென்ற போதே குறித்த சிறுமி ஓடைக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை பிரதேச மக்கள் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறுமி உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடும் மழையுடனான வானிலைக்கு மத்தியிலும் பெருந்திரளானோர் சிறுமியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *