Vijay - Favicon

அதிக விலையில் முட்டை விற்பனை செய்வோரை தேடி சுற்றிவளைப்பு




Colombo (News 1st) அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்டறியும் வகையில் இன்று(08) முதல் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

விலங்குணவு வகைகள், கால்நடை தீவணம் ஆகியவற்றின் விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்டறியும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முட்டடைக்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.





Source link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *